Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

அர்ஜெண்டினா சென்று ‘மோடி ஜெர்சி’ வாங்கிய பிரதமர்!

$
0
0

ஜி20 மாநாட்டில் பிஃபா தலைவரைச் சந்தித்த பிரதமர் மோடி ஜெர்சி ஒன்றை பரிசாகப் பெற்றுள்ளார்.

அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் ஜி20 உச்சி மாநாடு நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.

இந்தக் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியாக அனைத்து நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, 2022ஆம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்துவதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சர்வதேச கால்பந்து விளையாட்டு சம்மேளனமான பிஃபாவின் தலைவர் கியான்னி இன்ஃபான்டினோவை மோடி சந்தித்தார். அப்போது, கியான்னி மோடிக்கு அவரது பெயர் அச்சிடப்பட்ட ஜெர்சியை பரிசாக வழங்கியுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “அர்ஜெண்டினாவுக்கு வரும்போது கால்பந்தாட்டத்தை நினைக்காமல் இருக்க முடியாது. அர்ஜெண்டினாவின் வீரர்கள் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றுள்ளனர். இன்று பிஃபா தலைவர் கியான்னி இன்ஃபான்டினோவிடமிருந்து இந்த ஜெர்சியை பெற்றுக்கொண்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>