ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வரத்தில் 58–வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் செப்டம்பர் 25-28ம் தேதி வரை நடைப்பெறுகிறது.
2ம் நாளான நேற்று நடந்த 100மீ தடை தாண்டும் ஓட்டப்பந்தய போட்டியில், தமிழக வீராங்கனை கனிமொழி 13.71 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
13.74 வினாடிகளில் 2வது இடத்தைப் பிடித்த ஜப்பானின் சிமொரா வெள்ளி வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனை நித்யா (13.99 வினாடி) வென்கலப் பதக்கம் வென்றார்.
கனிமொழி சென்னை பிராட்வேயில் உள்ள புனித ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைமை பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டன்டுமான பி நாகராஜிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.
Mobile AppDownload Get Updated News