The victor and the vanquished. Sportsmanship at its finest. After four hours and 47 minutes of pure theatre,… https://t.co/39jUMsvfYA
சர்வதேச டென்னிஸ் அரங்கில் கிராண்ட்ஸ்லாம் அந்துஸ்து பெற்ற பாரம்பரிய டென்னிஸ் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடர், இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 132வது தொடர், லண்டனில் கடந்த 2ம் தேதி துவங்கியது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தென் ஆப்ரிக்காவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார். இதில் முதல் இரண்டு செட்டை 6-2, 7-6 என கைப்பற்றிய பெடரர், அடுத்த நடந்த மூன்று செட்களையும் 5-7, 4-6, 11-13 என கோட்டைவிட்டு அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
நடால் முன்னேற்றம்......
இதே போல மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் ரபெல் நடால், அர்ஜெண்டினாவின் ஜூவான் டெல் போட்ரோவை 7-5, 6-7, 4-6, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஜப்பானின் நிசிகோரியை 6-3, 3-6, 6-2, 6-2 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர், கனடாவின் ராவ்னிக்கை 6-7, 7-6, 6-4, 6-3 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
யார்... யார்.... மோதல்?
இதில் அரையிறுதியில் நடால்-ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். இஸ்னர்- ஆண்டர்சனை எதிர்கொள்கிறார்.
மனித நேயம்.....
காலிறுதியில் சுமார் 4 மணி நேரம் 47 நிமிடங்கள் நடாலுடன் போராடி தோல்வியடைந்த ஜூவான் டெல் போட்ரோ, தோல்வியடைந்த சோகத்தில் அப்படியே மைதானத்தில் சோகத்தில் படுத்தார். இதையடுத்து தனது வெற்றியை கொண்டாடும் முன் நடால், போட்ரோவுக்கு ஆறுதல் கூறினார்.
LONDON: World number one Rafael Nadal set-up a mouthwatering Wimbledon semi-final against old rival Novak Djokovic after battling back to beat Juan Martin del Potro in a Centre Court thriller on Wednesday.
Mobile AppDownload Get Updated News