Back with a bang and a #DipaKarmakar is the stuff champions are made of! After battling an injury for the past 2… https://t.co/0iuAA4wRfB India is proud of @DipaKarmakar! Congratulations to her on winning a well-deserved Gold in the vault event at the F… https://t.co/vDbEIrL9a3
துருக்கியில் சர்வதேச ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு சார்பில் உலக சலாஞ்ச் ஜிம்னாஸ்டிக் நடக்கிறது. இது ஆண்கள், பெண்கள் என இருபிரிவினருக்கும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.
கடந்த மே மாதம் முதல் வரும் செப்டம்பர் வரை குரோசியாவின் ஆஸ்ஜிக், சுலோவேனியாவின் கோபர், போர்ச்சுகலின் குய்மாரஸ், துருக்கியின் மெர்சின், ஹர்கேரியின் ஜாம்பாத்லே, பிரான்ஸின் பாரீஸ் அகிய நகரங்களில் நடக்கிறது.
இதில் ஆஸ்ஜிக், கோபர், குய்மாரஸ் நகரங்களில் உலக ஜிம்னாஸ்டின் சாலஞ்ச் முடிந்த நிலையில், துருக்கியின் மெர்சின் நகரில் கடந்த 6ம் தேதி உலக ஜிம்னாஸ்டிக் சாலஞ்ச் துவங்கியது.
இதன் பெண்களுக்கான வால்ட் பிரிவில் இந்தியாவின் தீபா கர்மாக்கர், தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இப்பிரிவில் மொத்தமாக 14.150 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதே தொடரின் மற்றொரு பிரிவான பேலன்ஸ் பீம் ஃபைனலுக்கும் தீபா கர்மாக்கர் (11.850 புள்ளிகள்) மூன்றாவது இடத்துடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மோடி வாழ்த்து......
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தீபா கர்மாகருக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,‘தீபா கர்மாகரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. உலக சாலஞ்ச் ஜிம்னாஸ்டிக்கின் வால்ட் பிரிவில் தங்கம் வென்றதற்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி அவரின் விடா முயற்சிக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Mobile AppDownload Get Updated News