Not long to go now until #URUFRA! TV listings ?? https://t.co/xliHcye6wm Live Blog ?? https://t.co/UVpL02htQk… https://t.co/A4h7s7vxjF Are @FrenchTeam on their way to the semi-finals? #URUFRA 0-2 #WorldCup https://t.co/GqPPI93ihQ
விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் பீபா கால்பந்து உலகக்கோப்பை, கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்யாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக்கோப்பையில், குரூப் சுற்றுகள் முடிந்து நாக் அவுட் சுற்றுக்கு 16 அணிகள் தகுதி பெற்றன.
இந்த நாக் அவுட் சுற்றில், அர்ஜென்டினாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல், போர்ச்சுகல் அணியை வீழ்த்திய உருகுவே அணியும் காலிறுதிக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. தரவரிசையில் 7 ஆம் இடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணியில் கிரிஸ்மான், மபாபே மற்றும் போக்பா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும், உருகுவே அணியில் லூயில் சுவாரஸ், கவானி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் உள்ளதால் இரு அணிகளும் சம்பலம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
அணி விவரம்:
உருகுவே: Muslera, Caceres, Gimenez, Godin, Laxalt, Nandez, Torreira, Vecino, Bentancur, Suarez, Stuani.
துணை வீரர்கள்: Campana, Varela, Sanchez, Rodriguez, De Arrascaeta, Gaston Silva, Maxi Pereira, Gomez, Coates, Urreta, Martin Silva.
பிரான்ஸ்: Lloris, Pavard, Varane, Umtiti, Lucas, Pogba, Kante, Mbappe-Lottin, Griezmann, Tolisso, Giroud.
துணை வீரர்கள்: Mandanda, Kimpembe, Lemar, Dembele, Nzonzi, Rami, Fekir, Sidibe, Thauvin, Mendy, Areola.
நடுவர்: Nestor Pitana (Argentina)
இதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், உருகுவே அணியில் நட்சத்திர வீரர் கவானி காயம் காரணமாக விளையாடாமல் போனது, அந்த அணிக்கு மிகப் பெரிய அடியாக அமைந்தது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணியில் ரபேல் வரனே, 41வது நிமிடத்தில் அற்புதமான ஹெட்டர் மூலம் பிரான்சின் கோல் கணக்கைத் தொடங்கினார். இதனால், ஆட்டத்தின் பாதி நேர முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து, இரண்டாவது பாதியில் எப்படியாவது கோல் அடித்து ஆட்டத்தை சமநிலை செய்ய வேண்டும் என்ற உருகுவே அணியின் கனவை பிரான்ஸ் அணியின் கிரிஸ்மான் தகர்த்தார். ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் கிரிஸ்மான் அடித்த பந்து, உருகுவே அணியின் கோல்கீப்பர் பெர்னாண்டோ முஸ்லீரோவின் கையில் பட்டு கோல் போஸ்ட்டில் விழுந்தது. இதன்மூலம், பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆதிக்கம் பெற்றது.
இதன்பின், ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் இளம் வீரர் மபாபே மற்றும் உருகுவே அணியின் ராட்ரீகஸ் ஆகியோரிடையே மோதல் உண்டானது. இதனால், மைதானத்தில் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் நடுவர் மஞ்சள் அட்டை கொடுத்தார்.
யின் கோல் அடிக்கும் முயற்சிகள் எதுவும் எடுபடாததால், 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி, அரையிறுதியில் முதல் அணியாக நுழைந்துள்ளது. இதையடுத்து, இன்று நடக்கும் இரண்டாவது காலிறுதி போட்டியில் பிரேசில் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோத உள்ளன.
Mobile AppDownload Get Updated News