பிரேசிலின் ரியோவில் ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் பெண்கள் குண்டு எறிதலில் இந்தியாவின் தீபா மாலிக் எப்.53 பிரிவில் பங்கேற்றார். இதில் 4.61 மீ., தூரம் வீசிய தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன்மூலம் பாராஒலிம்பிக் போட்டிகள் பதக்கம் வென்ற முதல் இந்தீய வீராங்கனை என்ற பெருமை பெற்றார் தீபா மாலிக். இதை அவரது, தாய், தந்தை, உறவினர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.
உலகின் உச்சத்தில்....
தீபா வெள்ளிப்பதக்கம் வென்றது குறித்து அவரது தந்தை கூறுகையில்,'நாட்டுக்காக தீபா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு தந்தையாக இந்த உலகின் உச்சத்தில் இருப்பதைப்போல உணர்கிறேன்.' என்றார்.
வார்த்தைகள் இல்லை:
தீபாவின் தாயார் கூறுகையில்,' தற்போது நாங்கள் அடைந்துள்ள மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தீபாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.' என்றார்.
Mobile AppDownload Get Updated News