#UPDATE "I gave serious thought to quitting, but my love for my country and this shirt is too great," says #Messi https://t.co/bWsHL6irRS
அர்ஜெண்டினா அணிக்காக விளையாடி வந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி(29), கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கோபா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டியில் சிலியிடம் தோல்வியை தழுவினார். இதனால் மிகவும் வருத்தமடைந்த அவர், உடனடியாக தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்.
உலகக்கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளன. இதில் அர்ஜெண்டினா அணி, உருகுவே மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுடன் விளையாட உள்ளது. இந்நிலையில் இதற்கான வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில் அர்ஜெண்டினா அணிக்காக தான் மீண்டும் விளையாட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது நாட்டை மிகவும் நேசிப்பதாகவும், அதற்கு தன்னால் ஆன சேவையை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் அர்ஜெண்டினா, முக்கிய தொடர்களில் 4வது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.
கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, தனக்குள் நிறைய கேள்விகள் எழுந்ததாகவும், ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் மெஸ்ஸி கூறினார். ஆனால் அர்ஜெண்டினா கால்பந்து அணியில் சரிசெய்ய வேண்டியவை நிறைய உள்ளதாகவும், அவற்றை உள்ளிருந்து தான் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு, பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது மெஸ்ஸியின் முக்கியமான சர்வதேச சாதனையாகும்.
Mobile AppDownload Get Updated News