Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

விட்டுக்கொடுக்காத ஜப்பான்: செனிகலுக்கு எதிராக ‘டிரா’!

$
0
0

எக்டரின்பர்க்: ஜப்பான், செனிகல் அணிகள் மோதிய உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் ’டிரா’ வில் முடிந்தது.

உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான 21வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடக்கிறது. வரும் ஜூலை 15 வரை ரஷ்யாவில் இத்தொடர் நடக்கிறது. 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ரஷ்யாவின் 11 முக்கிய நகரங்களில் 64 போட்டிகள் நடக்கிறது.

இதன் ஃபைனல் போட்டி மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் நடக்கவுள்ளது. கடந்த 32 ஆண்டுகளில் உலகக்கோப்பை தொடருக்கு அமெரிக்க ஆண்கள் அணி தகுதி பெற தவறியது.

இந்நிலையில் எக்டரின்பர்க் மைதானத்தில் நடந்த குரூப் - எச் பிரிவின் லீக் போட்டியில், ஜப்பான் அணி, செனிகல் அணியை எதிர்கொண்டது. இதில் முதல் பாதியின் ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்திய செனிகல் அணிக்கு போட்டியின்11வது நிமிடத்தில் மானே முதல் கோல் அடித்தார். இதற்கு ஜப்பானின் இன்யூ (34) பதிலடி கொடுக்க, முதல் பாதியின் முடிவில் போட்டி 1-1 என சமநிலை வகித்தது.
64724065

விட்டுக்கொடுக்காத ஜப்பான்......
பின் பரபரப்பாக துவங்கிய போட்டியின் இரண்டாவதுபாதியின் துவக்கத்திலும் செனிகல் வீரர்களே ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 71வது நிமிடத்தில், செனிகல் வீரர் வாகே இரண்டாவது கோல் அடித்தார். இதற்கு ஜப்பான் வீரர் ஹோண்டா (78வது நிமிடம்) பதிலடி கொடுக்க போட்டி சூடுபிடித்தது.
64724066

பின் கோல் அடிக்க இரு அணி வீரர்களும் எவ்வளவு போராடிய போதும் கடைசி வரை கோல் எதுவும் அடிக்க முடியாத காரணத்தால், போட்டி 2-2 என ‘டிரா’ ஆனது.
64724067

ஹோண்டா வரலாறு....
இப்போட்டியில் ஜப்பான் அணிக்காக 78வது நிமிடத்தில் கோல் அடித்த ஹோண்டா, உலகக்கோப்பை வரலாற்றில் ஜப்பான் அணிகாக மூன்று உலகக்கோப்பையில் (2010, 2014, 2018) கோல் அடித்த முதல் ஜப்பான் வீரர் என்ற பெருமை பெற்றார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>