ரியோ: பிரேசிலின் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பிரேசிலின் ரியோவில் ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் பெண்கள் குண்டு எறிதலில் இந்தியாவின் தீபா மாலிக் எப்.53 பிரிவில் பங்கேற்றார். இதில் 4.61 மீ., தூரம் வீசிய தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன்மூலம் பாராஒலிம்பிக் போட்டிகள் பதக்கம் வென்ற முதல் இந்தீய வீராங்கனை என்ற பெருமை பெற்றார் தீபா மாலிக்.
Mobile AppDownload Get Updated News