#RioParalympics: Mariyappan wins gold, Varun bronze in high jump pic.twitter.com/BDBaludyUn
ரியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தமிழக வீரர் மாரியப்பன் தங்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார். இவர், சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். 21 வயதான மாரியப்பன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார்.
இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர். மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து ஊனமானார்.
விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார். தற்போது, பிரேசிலில் சாதனை படைத்ததன் மூலமாக, உலக அரங்கில் இந்தியா மட்டுமின்றி, தமிழகத்திற்கும் சிறப்பு தேடி தந்துள்ளார் மாரியப்பன்...
Mobile AppDownload Get Updated News