Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ரெயின்...ரெயின்...கோ.... அவே..... டுவிட்டரில் ரைம்ஸ் பாடிய ரசிகர்கள்!

$
0
0

மும்பை: இந்தியா, கென்யா அணிகள் மோதிய இண்டர்காண்டினெண்டல் கோப்பை தொடரின் லீக் போட்டியில், மழை குறுக்கிட்டதால், டுவிட்டரில் ரசிகர்கள் மழை நிற்க வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தயாராகும் விதமாக, இந்திய கால்பந்து கூட்டமைப்பு, முதல் முறையாக நான்கு அணிகள் பங்கேற்கும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை தொடரை முதல் முறையாக இந்தியாவில் நடத்த திட்டமிட்டு அறிவித்தது.

மூன்று கண்டங்கள்:
இதில் தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இந்தியா நேரடியாக தகுதி பெற்றது. தவிர பிபா உறுப்பினர்களான சீன தைபே, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்கிறது.

செஞ்சுரி சேத்ரி:
இந்நிலையில் இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரியின் 100வது சர்வதேச போட்டியாகும். இதற்காக போட்டி துவங்கும் முன், இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு, இந்திய கால்பந்து வீரர்கள் மரியாதை அளித்தனர்.
64453585

மழை குறுக்க்கீடு:
இந்நிலையில் மும்பையில் கடும் மழை பெய்ததால், போட்டியின் முதல் பாதியில் பந்தை பாஸ் செய்ய இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர். ஆனால் பலத்த மழை பெய்ததால், மைதாத்தில் அதிக தண்ணீர் தேங்கி, பந்தை பாஸ் செய்வது கடினமாக இருந்தது.

டுவிட்டரில் ரைம்ஸ்:
இதையடுத்து முதல் பாதி போட்டி இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் 0-0 என சமநிலை வகித்தது. இதையடுத்து இந்திய கேப்டன் சுனில் சேத்ரி பங்கேற்கும், 100வது போட்டியை கெடுக்கும் விதமாக பெய்த மழை நிற்க வேண்டும் என சமூக வலைதளமான டுவிட்டரில் ரசிகர்கள் வருண பகவானிடம் வேண்டிக்கொண்டனர். அதற்கு பலனாக இரண்டாவது பாதியில் மழை நின்று பலன் கிடைத்தது.

Sunil Chhetri played his 100th game for India as they took on Kenya in their second match of the Intercontinental Cup in Mumbai. However, the game was marred by a heavy downpour which made playing conditions extremely difficult. Here are the best reactions!

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles